மண்ணுக்கும் விண்ணுக்குமான தொலைவினை
யார் பிரிவாய்த் தந்ததந்த மழைக்கு?
சில தருணங்களில் மெல்லிய தூறலாகவும்
மாலைப் பொழுதுகளில் மாமழையாகவும் -
பிரிவினை போக்கிட தழுவிச் செல்கிறது தன் காதலை
அன்பின் மிச்சங்களாய்த் தொக்கி நிற்கின்றன
அந்த இலை மீதும் காய் மீதும்
மென்மை விரும்பிகளின் காதல் முழுமையாகட்டும்
காதலித்து போகட்டும் இன்னும் சில நேரம்!

நன்றி : யுகமாயினி மாத இதழ் (சனவரி 2010)